தமிழ்நாடு முழுவதும் அனுமதியின்றி சாலை நடுவில் வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்றக்கூறிய நீதிமன்ற உத்தரவை 100% நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் கொடிக்கம்பங்களை 100% அகற்றக்கூறிய நிலையில், சென்னையில் 31% மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கூறினர். கொடிக்கம்பங்களை முழுவதும் அகற்றாத பகுதிகளில், மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரும் என்றும் எச்சரித்துள்ளனர்.




