நகர்புறங்களில் 500 சதுர அடி வரை உள்ள கடைகளுக்கு சுய சான்று அடிப்படையில் ஒரே நாளில் தொழில் உரிமம் வழங்கும் வகையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், உணவு பொருட்கள் விற்பனை கடைகள் தவிர்த்து மற்ற கடைகளுக்கு இது பொருந்தும். இந்த உரிமத்தை இணையதளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் சிறு வணிகர்கள் பலரும் பயன்பெறுவர்.




