தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த ஆண்டும் ₹1,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், புதிய கல்விக் கொள்கையில் (NEP) ஒப்புதல் அளித்தால்தான் நிதி வழங்கப்படும் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், வரும் ஜூலை 7-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கல்வித்துறை உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் இது குறித்து முக்கிய முடிவெடுக்கப்படலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.




