நெல்லையை சேர்ந்த ஜோராம் (20) என்ற இளைஞர் சென்னையில் வாடகை வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டின் குளியலறையில் இளம்பெண் ஒருவர் குளிப்பதை ஜன்னல் வழியாக வீடியோ எடுத்துள்ளார். அப்போது ஜோராமின் செல்போன் ரிங்டோன் அதிக சத்தத்துடன் ஒலிக்க, கையும் களவுமாக சிக்கியுள்ளார். அதன்பின், அக்கம்பக்கத்தினர் ஜோராமை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.




