தேனி: கம்பத்தை சேர்ந்த இளமனோ (26) என்ற இளைஞர் கடந்த ஜூலை 12ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை எழுதினார். தேர்வை சரியாக எழுதவில்லை என கூறி வருத்தப்பட்ட அவரை பெற்றோர் சமாதானப்படுத்தி வந்தனர். இந்நிலையில் இளமனோ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகனை காணவில்லை என தேடிய பெற்றோர் அவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.




