அபிஷேக நீரின் மகிமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

Oplus_131072

அபிஷேக நீரின் மகிமைகள்
தமிழ்நாட்டில் இன்றைக்கு 45,000 ஆலயங்கள் இருக்கின்றன;கருங்கல்லால் கட்டப்பட்ட பழமையான ஆலயங்களை மட்டுமே இப்படிப்பட்ட பட்டியலில் சேர்த்திருக்கின்றோம்; மற்ற புதிய கோவில்களை சேர்த்தால் 10,00,000 க்கும் மேலாக இருக்கும்;
தினமும் இந்த ஆலயங்களில் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன; அபிஷேகம் மூலஸ்தானமாகிய கருவறையில் இருந்து வெளிவரும் பாதைக்கு கோமுகம் என்று பெயர்; பெண்ணின் பிறப்பு உறுப்பு போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் கோமுகம் வழியாக வெளிவரும் இடத்தில் பிரம்மா கோஷ்டமாக (பக்கவாட்டு தெய்வம்) அருள்புரிந்து வருகின்றார்;
சைவத்தின் தலைநகரமாக விளங்கும் திருவண்ணாமலை (விழுப்புரம் மாவட்டத்திற்கு அருகில் அமைந்திருக் கின்றது) யில் அருணாச் சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கின்றது; இங்கே உள்பிரகாரத்தில் உள்ள கோமுகத் தொட்டியில் இருந்து அருணாச்சலேஸ்வரரின் அருளால் இடைக்காட்டு சித்தரும், மலப்புழு சித்தரும் தோன்றினார்கள்;
இந்த கோமுகம் வழியாக வெளிவரும் அபிஷேக நீரில் சந்தனம், இளநீர், பால், தண்ணீர் என்று எது வந்தாலும் அதை நமது தலையில் தெளிக்கும் பழக்கம் இன்றும் இருக்கின்றது; இந்த கோமுகம் வழியாக வெளிவரும் அபிஷேக நீர் தொட்டிக்குள் விழும் முன்பாக நமது கைகளால் பிடித்து நமது தலையில் தெளித்தால் 200% பலனையும்,தொட்டிக்குள் விழுந்த 90 நிமிடங்களுக்குள் எடுத்து அதை நமது தலையில் தெளித்தால் 100% பலனையும்,தொட்டிக்குள் விழுந்த ஒரு நாளுக்குள் தெளித்தால் 50% பலனையும் பெறலாம்;(ஏனெனில், இந்த அபிஷேக நீரானது கங்கை நீரை விடவும் 100 கோடி மடங்கு உயர்வானது)
ஒரு வேளை இன்று அனுஷம் நட்சத்திர நேரத்தில் பிடிக்கப்பட்ட அபிஷேக நீரை சிறிது பயன் படுத்தினாலும்,பயன்படுத்தாமல் விட்டுவிட்டாலும் மீதிநீரை வீட்டில்/வீட்டுக்கு அருகில் இருக்கும் துளசிச் செடி மீது ஊற்றி விட வேண்டும்; அல்லது வில்வ மரத்தின் மீது ஊற்ற வேண்டும்; அல்லது வேறு ஏதாவது ஒரு செடியின் மீது ஊற்றிவிடலாம்;
ஒவ்வொரு நட்சத்திரம் நிற்கும் அன்றும் இந்த அபிஷேகத் தண்ணீரை எப்படி, எதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை அகத்திய மகரிஷி 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்துவிட்டார்;அவரது வம்சாவழியைச் சேர்ந்த இடியாப்ப சித்தர், தமது சீடராகிய சத்குரு வேங்கடராம சுவாமிகளுக்கு 1950 களில் தமிழ்நாட்டில் அண்ணாமலையில் நேரடியாக உபதேசம் செய்திருக்கின்றார்;
நமது சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராமசுவாமிகள் நமக்கு உபதேசம் செய்ததை இங்கே உங்களுக்கு தெரிவிக் கின்றோம்; நமது சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராமசுவாமிகளுக்கு இக்கணத்தில் நாம் நன்றிகள் தெரிவித்துவிட்டு இந்த ஆன்மீக உபதேசத்தை பின்பற்றிட ஆரம்பிப்பதுதான் முறை!
பரணி நட்சத்திரம், மகம் நட்சத்திரம் வரும் நாட்களில் பிடிக்கும் அபிஷேகத் தண்ணீர் மட்டும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்,அதன் தெய்வீகத் தன்மையை இழக்காமல் இருக்கும்;
வீட்டில் வயதானவர்கள் இறக்கும் தருவாயில் அவர்கள் தலையில் சில சொட்டுக்களும், வாயில் சில சொட்டுக்களும் விடுவதன் மூலமாக அவர்கள் இப்பிறவியில் எவ்வளவு பெரும் பாவம் செய்திருந்தாலும் அது இந்த ஒரு சிறு செயலால் மன்னிக்கப்பட்டு, அவர்கள் புண்ணிய ஆத்மாவாகி விடுகின்றார்கள்; ஒருவேளை, வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இறந்துவிட்டால், இறந்த 6 மணி நேரத்திற்குள் இவ்வாறு செய்யலாம்; அப்படி இறந்த பின்னர் கூட, அவர்கள் தலையில் சில சொட்டுக்களும், வாயில் சில சொட்டுக்களும் விடலாம்;
இவை அனைத்தும் சித்தர் பெருமக்களால் ஆராய்ந்து நமக்கு உபதேசிக்கப்பட்ட தெய்வீக ரகசியம் ஆகும்;
அசுபதி நட்சத்திரம்; கடுமையான கண்திருஷ்டி விலகிவிடும்; கெட்ட கனவுகள் வராது; கனவில் புலம்புபவர்கள் இனிமேல் புலம்பமாட்டார்கள்;தூக்கத்தில் உளறுபவர்களின் உளறல்கள் நின்று விடும்;
பரணி நட்சத்திரம்: மரண பயம் நீங்கும்;
கார்த்திகை நட்சத்திரம்:பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேருவர்; பிரிந்திருக்கும் ரத்த உறவுகள் ஒன்றாக வாழ வழிமுறை கிடைக்கும்;
ரோகிணி; குழந்தைகளின் பயம் நீங்கும்; அனுசுயா தேவி இந்த நட்சத்திரத்தில் பிடித்த அபிஷேக நீரைக் கொண்டு பல யுகங்கள் முறைப்படி பூஜை செய்து வந்தாள்; அதனாலேயே, மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீதத்தாத் தரேயரை மகனாகப் பெற்றாள்;
மிருகசீரிடம்: பேய் /கருப்பு சேஷ்டைகள் நீங்கும்;
திருவாதிரை: இறப்பதற்கு முன்பு இந்த நட்சத்திரத்தில் பிடிக்கப்பட்ட அபிஷேக நீரை அருந்தினால் சிவப்பதவி நிச்சயமாக கிடைக்கும்;
புனர்பூசம்: திருமணத் தடங்கல் விலகிவிடும் ;மாங்கல்ய பலம் மேம்படும்; திருமணம் செய்யும் போது(தாலி கட்டும் சுபவேளையில்) தம்பதி மீது தெளிப்பது மிகவும் நன்று;
பூசம்: பசுவின் மீது தெளித்தால் தெரியாமல் செய்த அனைத்து பாவங்களும் தீர்ந்துவிடும்;
ஆயில்யம்: ஆயுதங்கள்,பொருட்கள் மீது தெளிக்க வேண்டும்;
மகம்: இயற்கையான முறையில் உயிர் பிரியும்; விபத்தினால் உயிர் பிரியாது; ஆக,வாழும் போது ஒவ்வொரு மகம் நட்சத்திர தினத்தன்றும் நம் மீது தெளிக்க விபத்தில் இருந்து தப்பிவிடுவோம்;
பூரம்: வைத்தியர்கள் செய்யும் தொழில் இடையூறு வராமல் இருக்க உதவும்;நாக தோஷம் விலகிவிடும்;
உத்திரம்: கடன்கார்களின் தொல்லை படிப்படியாக நீங்கும்;
அஸ்தம்; ருது தோஷங்கள் விலகிவிடும்; எதிர்பாராத உதவி,சிக்கலான நேரத்தில் கிடைக்கும்;
சித்திரை: அறுவடைக்கு முன்பு,இந்த நட்சத்திர நாளன்று பிடித்த அபிஷேக நீரை வயல்களில் தெளிக்க வேண்டும்;
சுவாதி: புதிய புடவை,ஆடைகள் மீது தெளித்துவிட்டு பயன்படுத்த ஆரம்பிக்கலாம்;உறவுகளுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு வாங்கி வைத்திருக்கும் பொருட்கள் மீது தெளிக்க வேண்டும்; அதன் பிறகு,எப்போது வேண்டுமானாலும் அன்பளிப்பாக தரலாம்;
விசாகம்; கடைகள்,நிறுவனங்களில் இருக்கும் கஜானாவில் தெளிக்க வேண்டும்; தொழில் அமோகமாக இருக்கும்;
அனுஷம்: திருமணத் தடை நீங்கும்; நிச்சயித்தவர்கள் திருமணத்திற்கு முன்பு தமது தலையில் தெளிக்க வேண்டும்;
கேட்டை: பரிட்சை காய்ச்சல், போட்டி காய்ச்சல் என்று அவதிப்படும் குழந்தைகளுக்கு தெளிக்க அவர்கள் அளவற்ற மனோதைரியம் பெறுவார்கள்;
மூலம் : வாகனங்களின் சாவி மீது தெளிக்க விபத்தை தடுக்கலாம்;
பூராடம்: கஜானாக்களிலும்,எழுது கோல்களிலும் தெளிக்க நன்மை உண்டாகும்; பேனா,பென்சில் மீது தெளிக்க துன்பம் இல்லாத வாழ்க்கை உண்டு;
உத்திராடம்: விஷகடிகள் இராது; தூக்கத்தில் பயந்து அலறவோ,கீழே விழவோ மாட்டார்கள்;
திருவோணம்; உணவுப்பஞ்சம் வராது;
அவிட்டம்: கல்லூரி /அலுவலகம் போன்ற இடங்களில் அவர்களுக்கு விருப்பமான இடம் கிடைக்கும்; பதவிக்கு ஆபத்து வராது;
சதயம்: எதிரிகளின் கூட்டத்தில் சிக்கவே மாட்டோம்; எதிரிகளின் துன்பம் குறையும்;
பூரட்டாதி: விமானப் பயணமோ, வெளியூர்/தொலைதூரப்பயணமோ துன்பம் தராது; விமானப் பயணம் செல்வோர் இதை தம்முடன் கொண்டு செல்லலாம்;
உத்திரட்டாதி: சிவில், ஆர்கிடெக், சிவில் காண்டிராக்டர்கள் தெளிக்க நல்ல வருமானத்தைப் பெறுவார்கள்;
ரேவதி; தினசரி வாழ்க்கையில் தீ விபத்தில் சிக்க மாட்டார்கள்;
குறிப்பு:விநாயர் ஆலயமாக இருந்தாலும் சரி;
முருகக் கடவுள் ஆலயமாக இருந்தாலும் சரி;
மஹாவிஷ்ணு ஆலயமாக இருந்தாலும் சரி;
மஹா பைரவர் ஆலயமாக இருந்தாலும் சரி;
சிவபெருமானின் ஆலயமாக இருந்தாலும் சரி;
மஹாவராகி ஆலயமாக இருந்தாலும் சரி;
அங்காள பரமேஸ்வரி ஆலயமாக இருந்தாலும் சரி;
பழமையான ஆலயமாக இருந்தால் உடனடியான பலனைப் பெறலாம்;புதிய (100 ஆண்டுகளுக்கு உட்பட்ட ஆலயமாக இருந்தால்) சிறிது மெதுவான பலனைப் பெறலாம்;
உங்களுக்கு பஞ்சாங்கம் பார்க்கத் தெரிந்து,உங்களுக்கு தேவையான நட்சத்திரம் வரும் நாளன்று அபிஷேக நீரை ஒரு பாட்டிலில் பிடித்து வந்து,அந்த நட்சத்திரம் மறையும் முன்பு (நட்சத்திர நேரம் முடியும் முன்பு) வீட்டில் உள்ள அனைவரும் தமது தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்; பிறகு, சிறிது அருந்தலாம்;
இது முடியாதவர்கள், தினமும் காலையில் குளித்துவிட்டு, அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று அபிஷேகத் தண்ணீரை தலையில் தெளித்துவிட்டு, வீட்டில் இருப்பவர்களுக்காக ஒரு பாட்டிலில் பிடித்துக் கொண்டு வீட்டிற்கு கொண்டு வந்து வைத்துவிட்டு வேலைக்குச் செல்லலாம்;
கோமுகத்தின் முன்பாக நின்றாலே அவரது உடலுக்குள் ஈசன் புகுந்து விடுகின்றார்; பிறகு, ஒரு போதும் பிரிவதில்லை;இதையே, ஸ்ரீமாணிக்க வாசகர்,திருவெம்பாவையில் ‘புகுந்து கலந்து பிரியாமல் இருக்கும் ரகசியம்’ என்று பாடியிருக்கின்றார்;

Read Previous

மனைவி தலையை சுவரில் அடித்து கொன்ற கணவர்..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

சுரேஷ் ரெய்னாவிற்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்க துறை..!! காரணம் என்ன?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular