ஜார்க்கண்ட் மாநிலம் ஜோகிசோல் கிராமத்தில், குடும்ப தகராறில் 23 வயதான அப்துல் காசிம் தனது இளம் மனைவி ஜனகி குமாரியின் தலையை சுவரில் அடித்து கொன்றுள்ளார். நேற்று (ஆகஸ்ட் 12) அதிகாலை நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜனகியின் தந்தை அளித்த புகாரின் பெயரில், அப்துல் காசிம் மற்றும் அவரது தாய் குல்னார் பேகம் (52) ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




