தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், இலவச காதொலிக் கருவி பெறலாம். செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள் கடந்த 3 வருடத்திற்குள் பெறாதவராக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவர் சான்றிதழ், ஆதார், புகைப்படம் உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த முகாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடக்கிறது.




