தமிழ்நாடு முழுவதுமுள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நாளை (செப்.16) ரூ.3,000 கோடி கடன் வழங்கப்படும் என தமிழ்நாடு அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3000 கோடி கடன் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார், இந்நிலையில், மகளிருக்கான கடனுதவி திட்டத்தை சேலம் கருப்பூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார். இதன்மூலம், 2.55 கோடி பெண்கள் பயன்பெற உள்ளனர்.




