சேலம் கெங்கவல்லி அருகே நடுவலூா் சின்னம்மன் கோயில் அருகே வசித்த ராமசாமி (47) மற்றும் அவரது மகன் ப்ரீத்தீஷ் (11) ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, பூஜை அறையின் நிலைக்காலில் இருந்த கரையானை அழிக்க, ராமசாமி எண்ணெய் என நினைத்து பெட்ரோலை நிலைக்காலின் மீது ஊற்றினார். இதில், அறை முழுவதும் தீ பரவியதில் ராமசாமியும், ப்ரீத்தீஷும் பலத்த காயமடைந்தனர்.




