மத்தியப்பிரதேசத்தில் 1 முதல் 7 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகள் திடீர் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் ‘கோல்ட்ரிஃப்’ இருமல் மருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளது. பெயிண்ட் தயாரிக்கப் பயன்படும் டைஎத்திலீன் கிளைகால் என்ற ரசாயனம் மருந்தில் கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால், மறு உத்தரவு வரும் வரை காஞ்சிபுரம் உற்பத்தி நிறுவனத்திலிருந்து மருந்துகளை விநியோகிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.




