பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு ரூ.5,000 பரிசு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு தீபாவளி சமயத்தில் வெளியாகலாம். திட்டத்தை செயல்படுத்த ரூ.10,000 கோடி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அரிசி மற்றும் சர்க்கரை ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசு கிடைக்கும். அடையாளத்திற்காக ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படாது என கூறப்படுகிறது.




