திருவள்ளூர் அருகே பேரம்பாக்கத்தை சேர்ந்தவர் திமுக இளைஞரணி அமைப்பாளரும் விவசாயியுமான சிலம்பரசன் (38). இவர் நேற்று (அக்., 29) காலை தனது கடையை பார்வையிட சென்றபோது, அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மப்பேடு போலீசார் சடலத்தை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




