பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பிரபல ‘குல் பிளாசா’ வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வளாகத்தின் தரைத்தளத்தில் உள்ள ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பிடித்து, மற்ற கடைகளுக்கு பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




