தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஜன.18) நிறைவடைகிறது. விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த பணிகளின் கீழ் இதுவரை சுமார் 18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்கான இறுதி வாய்ப்பு இன்றோடு முடிவுக்கு வருகிறது.




