தஞ்சாவூர் திருவிடைமருதூரில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலை கல்லூரிக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என பெயரிடப்பட்டது. இதையடுத்து, கவுரவ விரிவுரையாளர்கள் 9,646 பேருக்கு மாதம் ரூ.5,000 சம்பள உயர்வு வழங்கப்பட்டு ஊதியம் ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டதாக அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார். மேலும் 2,700 உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.




