நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: நாடு முழுவதும் போராட்டம் தீவிரம்; மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை தொடர்ந்து டெல்லியில் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன.
இந்த சூழலில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் தொடங்கிய போராட்டம் தற்போது சென்னை, பெங்களூரு, பாட்னா, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் பரவி, நாடு முழுவதும் தீவிர போராட்டமாக உருவெடுத்துள்ளது.




