தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, காவல்துறையினர் தன்னை தலையிலும் காலிலும் தாக்கியதாக அருணாச்சலம் கூறுவது போன்ற வாக்குமூல வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. விசாரணையின்போது அருணாச்சலம் மயங்கி விழுந்ததாகவும், அவரது தலையில் ஏற்கனவே கட்டி இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இது லாக்-அப் மரணம் அல்ல என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




