கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் ஆண்கள் 100 மீட்டர் T47 பாரா அத்லெடிக்ஸ் பிரிவில் இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். திலீப் காவிட் 10.71 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து மொகம்மது பாசில் 10.83 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா இதுவரை 3 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.




