மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை மீண்டும் பதற்றமடைந்துள்ளது. அமெரிக்க படைகள் மற்றும் சவூதி அரேபியாவின் எண்ணெய் உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் இணைந்து ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களின் நிலைகளை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டு நடவடிக்கையில் ஆயுதக் குழுவைச் சேர்ந்த 20 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தொடர் பதிலடி தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளதுடன், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.




