மெட்ரோ திட்டப் பணிகள் வேகமெடுக்க வேண்டும்.. அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தல்..!!

 

 

சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவடைய வேண்டும் என்பதற்காக, பணிகளை மேலும் துரிதப்படுத்துமாறு முதலமைச்சர் விஜய் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

கத்திப்பாரா பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் மற்றும் எதிர்காலத்தில் அறிமுகமாகவுள்ள ஆளில்லா (Driverless) மெட்ரோ ரயில் இயக்கத்திற்கான முன்னேற்பாடுகளை அவர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களின் பணியை பாராட்டினார்.

 

மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பயணிகளின் வசதிக்கு முன்னுரிமை அளித்து, அனைத்து கட்டுமானப் பணிகளையும் தரத்துடன், பாதுகாப்பாக மற்றும் விரைவாக நிறைவு செய்ய வேண்டும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆய்வு, மெட்ரோ திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

Read Previous

இன்ஸ்டாகிராம் நட்பு விபரீதம்… 16 வயது சிறுமியை அழைத்துச் சென்ற 22 வயது இளைஞர் போக்சோவில் கைது..!!

Read Next

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 133-வது பிறந்த நாள்.. சேவையை போற்றிய முதலமைச்சர் விஜய்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular