இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தயாராகி வரும் நிலையில், அணிக்கு அடுத்தடுத்து பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.
ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பேட்டர் சாய் சுதர்சன் ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, தொடை தசையில் ஏற்பட்ட காயத்திலிருந்து வாஷிங்டன் சுந்தர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் மட்டுமின்றி, 2-வது டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
முக்கியமான ஆல்-ரவுண்டர் இல்லாதது இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இது தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்கு குறிப்பிடத்தக்க பின்னடைவாக பார்க்கப்படுகிறது.




