ஆக.22-ல் திமுக தலைமை செயற்குழு கூட்டம்: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

 

 

தமிழகத்தில் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், திமுகவின் தலைமை செயற்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

 

திமுகவின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதால், இந்தக் கூட்டம் கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

இதற்கிடையே, திமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விமர்சனங்களும் தகவல்களும் வெளியாகி வருகின்றன. இதுபோன்ற சூழலில் திமுக செயற்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.

 

வரும் 22-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கட்சியின் தற்போதைய அரசியல் நிலவரம், எதிர்கால கூட்டணி நிலைப்பாடு மற்றும் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

அதிமுகவில் திடீர் திருப்பம்: வேலுமணி அணியில் விரிசலா?

Read Next

“ராகுல் காந்தியை தலைவராக ஏற்றது காங்கிரஸுக்கு துயரம்” – ஜெ.பி. நட்டா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular