இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையால் மக்கள் வெளியேற்றம்!

 

 

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள புளோரெஸ் தீவு அருகே, கடலுக்கு அடியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் கடலோரப் பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் அச்சமடைந்து, பாதுகாப்பான உயரமான பகுதிகளை நோக்கி இடம்பெயரத் தொடங்கினர்.

 

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில கடலோரப் பகுதிகளில் கடல் நீர் பின்வாங்கியதால், மக்கள் மத்தியில் மேலும் பதற்றம் ஏற்பட்டது.

 

இதையடுத்து கடலோர மற்றும் ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு இந்தோனேசிய நில அதிர்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மீட்பு மற்றும் பாதிப்பு தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Read Previous

80-வது சுதந்திர தினம் இன்று கோலாகலம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Read Next

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular