4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ரஷ்யா–உக்ரைன் போரில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்குப் பதிலடியாக, ரஷ்யா மீது உக்ரைன் ஒரே இரவில் 600-க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவி மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா மேற்கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்காத நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




