உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் ரயில் நிலையத்தில், 26 வயது இளைஞரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென அதிக வெப்பமாகி பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் இளைஞரின் கைகள் மற்றும் உடலின் கீழ்பகுதியில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வெடித்த செல்போனை அவர் ஒரு மாதத்திற்கு முன்புதான் வாங்கியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.




