தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு பயிலும் 16.5 லட்சம் வளரிளம் பருவ மாணவ-மாணவிகளுக்கு இரத்த சோகையை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் ‘இரும்பு கண்மணி திட்டம்’ செயல்படுத்தப்படும் என அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
ரூ.6.37 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்தின் மூலம், மாணவர்களிடையே இரத்த சோகையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




