கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
மழையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து, சேத விவரங்களை கணக்கெடுக்க துறை சார்ந்த அதிகாரிகளை உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.




