SBI-ல் 10,000 காலிப் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு..!! முழு தகவலுடன் உள்ளே..!!
இந்தியாவில் புகழ்பெற்ற வங்கிகளில் ஒன்றான SBI தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இதன் தலைவரான சி.எஸ். செட்டி அவர்கள், THE PRESS TRUST OF INDIA -வில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, ” ஏற்கனவே, சுமார் 1500 தொழில்நுட்ப பணியாளர்களை பணி அமர்த்துவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட நிலையில், தற்போது வங்கி தேவையை பூர்த்தி செய்வதற்கும் மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதற்கும் Data scientists, data architects, network operators முதலிய பணியிடங்களுக்கு சுமார் 10,000 புதிய ஊழியர்களை நியமனம் செய்யவுள்ளோம்”. மேலும், “வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சேவைகளை வழங்குவதோடு டிஜிட்டல் சேனலில் உள்ள பின்னடைவை வலுப்படுத்துவதற்காக தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முதலீடு செய்துள்ளோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




