இதயம் , இதய தசைகள் மற்றும் ரத்தக்குழாய் ஆகியவற்றில் படிந்துள்ள கொழுப்பை கரைத்து வெளியேற்றும் மூலிகை மருத்துவம்..!!
தேவையான பொருட்கள்:
1. இஞ்சி
2. மிளகுத்தூள்
3. பூண்டு
4. எலுமிச்சை பழம்
ஆள்காட்டி விரல் நீளமுள்ள இஞ்சி துண்டை தோல் நீக்கி நன்கு நசுக்கி வைத்துக்கொள்ளவும். பூண்டு 20 பல் எடுத்து நன்கு நசுக்கி வைத்துக்கொள்ளவும். எலுமிச்சை பழம் ஒன்றை சாறு பிழிந்து வைத்துக்கொள்ளவும். மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்.. அரை லிட்டர் நீரில் மேற்சொன்ன பொருட்களை கலந்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். கொதிவந்தபின் அரை லிட்டர் நீர் கால் லிட்டர் நீராக சுண்டுமாறு சிறுதீயில் எரித்து இறக்கி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
தினமும் காலையில் வெறும்வயிற்றல் உணவுக்கு முன் 150 மில்லியும் மாலையில் 100 மில்லியும் பருகவேண்டும். குறைந்தது 15 நாட்கள் முதல் 25 நாட்கள் எடுத்துக்கொள்ளவேண்டும்.ரத்தக்குழாய்கள் , இதயம் மற்றும் இதய தசை சுவர்களில் உள்ள கொழுப்பை ( கொலஸ்ட்ரால்) கரைத்து வெளியேற்றும். இதனால் அதிக ரத்தஅழுத்தம், இதய செயலிழப்பு போன்றவை குணமாகும்.
இதய அறுவைசிகிச்சை செய்யவேண்டிய நிலையில் உள்ளவர்கள் இம்மருந்தை எடுத்துக்கொள்வதன் மூலம் அறுவைசிகிச்சை செய்வதை 90 சதவீதம் தவிர்க்கலாம் மற்றும் மீண்டுவரலாம்.




