உங்க வீட்டில் உடைந்த கண்ணாடி இருக்கா?.. உடனே அப்புறப்படுத்துங்க இந்த பிரச்சினை வருமாம்..!!

பொதுவாகவே வாழ்கைக்கு தேவையாக பல விடயங்கள் வாஸ்து சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை முறையாக பின்பற்றுவதால் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று மனநிறைவுடன் வாழ முடியும்.

அந்த வகையில் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கவும் நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் வீட்டில் சில பொருட்களை வைக்கவே கூடாது என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. இதில் உடைந்த கண்ணாடி முக்கிய இடம் வகிக்கின்றது.

உடைந்த கண்ணாடியை ஏன் வைக்க கூடாது?..

வீட்டில் உள்ள கண்ணாடி, ஜன்னல், கதவு கண்ணாடி அல்லது கண்ணாடி பாத்திரங்கள் போன்ற ஏதேனும் கண்ணாடிகள் உடைந்தால், அவற்றை உடனடியாக வீட்டை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என வாஸ்து சாஸ்த்திரம் குறிப்பிடுகின்றது.

நீங்கள் வீட்டில் அத்தகைய கண்ணாடியை வைத்திருந்தால், உங்கள் முன்னேற்றம் தடைப்பட்டு, உங்கள் வேலையில் சிக்கல்கள் ஏற்படலாம், உங்கள் உடல்நலம் மோசமடையலாம் அல்லது உங்கள் நிதி நிலைமை மோசமடையலாம்.

உங்கள் வீட்டில் ஜன்னல் அல்லது கதவு கண்ணாடி உடைந்தால் அல்லது விரிசல் ஏற்பட்டால், உடனடியாக அதை மாற்ற வேண்டும். உங்கள் கண்ணாடி உடைந்தால், உடனடியாக அதை அகற்றி, வீட்டிற்கு வெளியே யாருக்கும் தீங்கு விளைவிக்காத இடத்தில் எறியுங்கள்.

இதேபோல், ஜன்னல் மற்றும் கதவு கண்ணாடிகளை உடனடியாக மாற்றி புதிய கண்ணாடியை மாற்ற வேண்டும்.

உங்கள் வீட்டில் ஒரு கண்ணாடி திடீரென உடைந்தால், அது எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு நிகழ்வின் அறிகுறியாக இருக்கலாம்.இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்து சாத்திரத்திலும் குறிப்பிடப்படுகின்றது.

Read Previous

இன்றைக்கு நாம் செய்யும் நல்ல காரியம் என்றைக்காவது ஒருநாள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு திரும்ப கிடைக்கும் என்பதை உணர வைத்த பதிவு..!!

Read Next

தோல்வி பற்றியே சிந்திக்கும் ராசியினர் இவர்கள் தானாம்..!! உங்க ராசி என்ன?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular