எஸ்பிஐ நிஃப்டி 500 இன்டெக்ஸ் ஃபண்ட் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இது நிஃப்டி 500 இன்டெக்ஸைக் கண்காணிக்கும் ஒரு திறந்தநிலை (Open Ended) திட்டமாகும். இந்தத் திட்டம் முதன்மையாக நிஃப்டி 500 குறியீட்டை உள்ளடக்கிய பங்குகளில் குறைந்தபட்சம் 95 சதவிகிதம் மற்றும் அதிகபட்சம் 100 சதவிகிதம் வரை முதலீடு செய்யும் மற்றும் ட்ரிபார்ட்டி ரெப்போ மற்றும் லிக்விட் மியூச்சுவல் ஃபண்டின் யூனிட்கள் உட்பட அரசாங்கப் பத்திரங்களில் 5 சதவிகிதம் வரை முதலீடு செய்யும்.
இத்திட்டத்திற்கு தேவையான குறைந்தபட்ச விண்ணப்பத் தொகை ரூ. 5,000 மற்றும் அதிகபட்ச முதலீட்டிற்கு உச்ச வரம்பு இல்லை. இந்த திட்டத்தில் நீங்கள் தினசரி, வாராந்திர, மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர SIP மூலமாகவும் முதலீடு செய்யலாம். எஸ்பிஐ நிஃப்டி 500 இன்டெக்ஸ் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு இந்தியப் பொருளாதாரம் முழுவதிலும் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது, இது அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனத்தில் 92% ஐ உள்ளடக்கியது.




