நாம் எப்போதும் மூன்று வேலைகளிலும் உணவை உண்பது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. ஆனால் பலர் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் காலை உணவை புறக்கணிப்பதும் உண்டு. ஆனால் காலை உணவு எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்கும் நிச்சயமாக தெரிய வேண்டும். காலை உணவை சாப்பிடாமல் விட்டால் என்னென்ன ஆகும் என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
காலை உணவை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு எப்போதும் நல்லது சேர்க்காது. அது மட்டும் இல்லாமல் இதனால் நமது உடலுக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்தும் ஆரோக்கியமும் கிடைக்காமலேயே போகின்றன. இப்போது சரி ஆனால் பிற்காலத்தில் இதன் காரணமாக இதய நோய் கூட ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காலை உணவை தவிர்ப்பது விரதம் இருப்பது போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு எப்போதும் எதிரானவை தான். அனைவரும் இதை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எப்போதாக இருந்தாலும் காலையில் கொஞ்சமாவது உணவு சாப்பிட வேண்டும் என்று அவர்கள் அறிவுரை அளிக்கின்றனர்.




