காலங்காலமாய் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மற்றும் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பயன்களை பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்..
கால்நடைகளுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அதனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது என்பது மிகவும் கடினமான செயலாகும், இப்படி இருக்கும் பட்சத்தில் கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகுவார்கள் அவர்களின் நலன் கருதி தமிழக அரசு நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி வசதியை அளித்துள்ளது, இதற்கு நீங்கள் 1962 என்ற எண்ணை அழைத்து விவரம் தெரிவிக்க வேண்டும் அவ்வாறு தெரிவித்தால் கால்நடை மருத்துவ ஊர்தி குறிப்பிட்ட இடத்துக்கே வந்து சிகிச்சை அளிக்கும், மேலும் கால்நடைகளுக்கு எந்தவித பிரச்சனைகளாக இருந்தாலும் கால்நடை மருத்துவர்கள் அந்த கால்நடைகளை சரிவர பரிசோதித்து அதற்கான மருந்துகளை வீட்டில் உள்ள அல்லது தோட்டத்தில் உள்ள இடத்தில் வந்து தருகின்றனர், இந்த திட்டத்தினை தமிழக அரசு கால்நடை வளர்ப்பவர்களுக்காகவே அறிமுகம் செய்துள்ளது..!!




