Oplus_131072
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் இருக்கும் மனிதர்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்தார்கள் என்று சொன்னால் அது உண்மை . அதற்கு முதல் காரணம் என்னவென்றால் அவர்கள் உண்ணும் உணவு. ஏனென்றால் அந்த காலகட்டத்தில் எல்லாம் சிறுதானிய உணவுகள் மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை இயற்கையான முறையில் செய்து அதை சாப்பிடுவார்கள். குறிப்பாக கம்பு ராகி கேழ்வரகு போன்ற சிறுதானிய உணவுகள் என்னென்ன இருக்கிறதோ அதை அனைத்தையும் சாப்பிடுவார்கள். இந்த காலகட்டத்தில் பலருக்கும் குடலில் புண்கள் மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகள் வருகிறது அதற்கு காரணம் என்னவென்றால் உணவு முறைதான் ஒரு காரணம் வீட்டில் சமைத்து ஆரோக்கியமான முறையில் சாப்பிடாமல் கடைகளில் தொடர்ந்து சாப்பிடுவது மற்றும் ஆரோக்கியமான உணவுகளை தவிர்த்து இந்த நவீன காலகட்டத்திற்கு தகுந்த பீட்சா பர்கர் போன்ற உணவுகளை சாப்பிடுவது ரோட்டு ஓரங்களில் கிடைக்கும் உணவுகளை சாப்பிடுவது போன்ற பல காரணங்கள் இந்த அல்சர் பிரச்சனைகளை உண்டாக்குகின்றன. இந்த குடல் புண் மற்றும் அல்சர் பிரச்சனைக்கு தீர்வு ஒன்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
குடல்புண்கள் கேஸ்டிக் அல்சர். பெப்டிக் அல்சர் குணம் பெற மருத்துவம்
மாசிக்காய் சூரணம். 100 கிராம். மணத்தக்காளி இலைச்சார். அம்மான்பச்சரிசி இலைச்சார் .செம்பருத்தி பூச்சார். மாதுளம்பூச்சார் வகைக்கு 60 மில்லி. அதிமதுரம் சூரணம் 50 கிராம். மாங்கொட்டைச் சூரணம் 25 கிராம் இவற்றை ஒன்றுகலந்து ஒரு லீட்டர் தேங்காய் பாலுடன் கலந்து காய்ச்சி வடிகட்டி காலை மாலை 5 மில்லியளவு உணவுக்கு முன் சாப்பிட்டு வர சரியாகும்.




