கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், தவெக தலைவர் விஜய்க்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜன.12ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் நேரில் ஆஜராகிறார். இதற்காக விஜய்க்கு தங்குமிடம், காவல்துறை பாதுகாப்பு உள்ளிட்டவைக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.




