தமிழகத்தின் இந்த பகுதியில் மலையேறலாம்?.. டிரெக்கிங் போறவங்களுக்கு சூப்பர் ஆபர்..!! அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தின் இந்த பகுதியில் மலையேறலாம்: தமிழகத்திற்கு எத்தனையோ அடையாளம் இருந்தாலும் கூட, சுற்றுலா துறையை பொறுத்தவரை ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் குற்றாலம், கொடைக்கானல், ஊட்டி, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி உள்ளிட்ட பல இடங்கள் இருக்கிறது. இப்படி இருக்கையில் பெரும்பாலான மக்கள் டிரெக்கிங் போக விருப்பம் காட்டி வருகின்றனர்.

அதன்படி கஷ்டமான மலை பகுதிகளில் ஏறி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் மலைப்பாதையில் திடீர்  தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதிக்கு டிரெக்கிங் செய்ய கூடாது என்று அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு சார்பாக மலையேற்ற திட்டத்தை தற்போது தொடங்கியுள்ளது.

அதன்படி, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்  குற்றாலம், ஏலகிரி , சுவாமிமலை, செண்பக தேவி நீர்வீழ்ச்சி, வெள்ளியங்கிரி மலை, குரங்கணி, சாம்பலாறு  உள்ளிட்ட 40 வனப்பகுதிகளில் மக்கள் டிரெக்கிங் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் டிரெக்கிங் செய்ய விரும்புபவர்கள், தங்களுடைய  பெற்றோர் மற்றும் பாதுகாவலரின் ஒப்புதல் கடிதத்துடன் வரவேண்டும்.

மேலும் மலையேற முன்பதிவு செய்ய www.trektamilnnadu.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்கு கட்டணமாக 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 10 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் எளிதான மலையேற்ற பாதைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று அரசு தெரிவித்துள்ளது.

Read Previous

பல பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றியவரின் குழந்தைகள் சடலமாக கண்டெடுப்பு..!!

Read Next

சீத்தாபழத்தில் உள்ள சத்துக்கள் எதற்காக பயன்படுகிறது தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular