இந்த கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருக்கிறது. இந்த வெயிலின் காரணமாக நமது உடல் சூடாகிறது. ஆகையால் நமது உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்த தயிரை நாம் சாப்பிடுவது வழக்கமாகவும் இருக்கிறது. இதை தான் நாம் இந்த கோடை காலத்தில் அதிகமாக விரும்பி சாப்பிடுவோம். ஆனால் இந்த தயிரை ஒரு சில உணவுகளோடு சேர்த்து சாப்பிடவே கூடாது. அது என்னென்னவென்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
இந்த வெயில் காலத்தில் மாம்பழம் அனைவரின் வீட்டிலும் நிச்சயமாக இருக்கும். ஆனால் இந்த மாம்பழத்தையும் தயிரையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடவே கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இவை இரண்டையும் நாம் தனித்தனியாக தான் எப்போதும் சாப்பிட வேண்டும்.
ஏனெனில் இந்த தயிர் குளிர்ச்சி கொண்டதாகும். ஆனால் மாம்பழம் சூடு கொண்டது. ஆகையால் இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது நமது உடலுக்கு உபாதை ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதேபோன்று எண்ணெய் போன்ற உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் செரிமான கோளாறுகள் ஏற்படும்.




