நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. இந்த நவீன காலத்தில் நமது உணவு பழக்கம் மாறி இருக்கும் சமயத்தில் அவ்வப்போது ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிட வேண்டும். ஆனால் ஒரு சில நேரம் நன்மை தரும் உணவுகளும் தீமையை கொடுத்து விடும். அப்படி பாலில் பூண்டு வேகவைத்து சாப்பிட்டால் ஏற்படும் தீமைகளை இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
பாலில் பூண்டி வேக வைத்து சாப்பிடுவதனால் பல நன்மைகள் கிடைக்கும். ஆனால் ஒரு சிலருக்கு பல தீமைகளை அது கொண்டு வந்து சேர்க்கிறது. பூண்டு பால் குடிப்பதனால் ஸ்கின் அலர்ஜி சிலருக்கு ஏற்படக்கூடும். பூண்டில் இருக்கும் சத்துக்கள் வெடிப்புகளை உண்டாக்குகிறது. இதனால் தோல் எரிச்சல் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
பூண்டு பால் குடிப்பது சிலருக்கு வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தும். பூண்டு பால் குடிப்பதனால் தலைவலியும் சிலருக்கு ஏற்படலாம். பூண்டு மற்றும் பால் இரண்டும் தலைவலிக்கு காரணமாக இல்லை என்றாலும், இவை இரண்டும் ஒன்றாக சேரும்போது தலைவலியை ஏற்படுத்துகிறது. பூண்டு பால் குடிப்பது சில நேரங்களில் ரத்த அழுத்தத்தை குறைத்து விடுகிறது என்ற மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.




