பெண்களே மறந்தும் சமையலறையில் இதை பண்ணிடாதீங்க..!! குடும்பமே சிக்கலில் தவிக்கும்..!!

 

நான் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றி பெற தான் விரும்புவோம். மேலும் வாழ்க்கையில் வளர்ச்சி அடைய வேண்டுமென்று பலரும் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். உழைத்தால் மட்டும் போதுமா என்று கேட்டால் கண்டிப்பாக கடுமையாக உழைக்க வேண்டும் அதோடு சில வாஸ்து சாஸ்திர குறிப்புகளையும் பின்பற்ற வேண்டும் தெய்வத்தையும் வழிபட வேண்டும். இதையெல்லாம் பின்பற்றினாலே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற்று வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும். வீடு கட்டுவதில் இருந்து வீடு கட்டி முடிப்பது வரை வாஸ்து சாஸ்திரம் என்பது கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக சமையலறையில் உள்ள பாத்திரங்களை எங்கு வைக்க வேண்டும் அடுப்பை எங்கு வைக்க வேண்டும் ஃபிரிட்ஜ் எங்கு வைக்க வேண்டும் என்பது உட்பட வாஸ்து குறிப்புகளையும் ஜோதிட குறிப்புகளையும் மக்கள் பின்பற்றுகிறார்கள். இந்த வகையில் சமையலறையில் இதையெல்லாம் வாஸ்து சாஸ்திரப்படி செய்யக்கூடாது என்று கூறுகிறார்கள். அது என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

வாஸ்து சாஸ்திரப்படி சமையலறையில் தோசை சட்டியை தலைகீழாக கவிழ்த்து வைக்கக் கூடாது. அப்படி கவிழ்த்து விட்டால் வீட்டில் பண நெருக்கடி ஏற்படும். அதேபோல்தான் பானை மற்றும் குக்கரை கவிழ்த்து வைக்கக் கூடாது.இவ்வாறு வைத்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து வீட்டில் உள்ள அனைவருக்கும் இடையே பல வாக்குவாதங்கள் கருத்து வேறுபாடுகள் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். மேலும், எப்பொழுதும் உப்பு ஜாடியில் உப்பு நிறைந்தே இருக்க வேண்டும். இவ்வாறு நிறைந்து இருந்தால் அந்த வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் கிடைத்து செல்வம் செழிக்கும். மேலும் உப்பு தீர்ந்து போய் இருந்தால் அந்த வீட்டில் பண வரவு என்பதை இருக்காது அதற்கு பதிலாக எதிர்பாராத விதமாக பல பிரச்சினைகள் வந்து பணரீதியாக கஷ்டப்படுவார்கள். எனவே இதை எல்லாம் சமையலறையில் ஒருபோதும் பண்ணக்கூடாது.

Read Previous

கழிவறையில் ஸ்மார்ட் போன் உபயோகம் செய்வதால் ஏற்படும் விளைவுகள்..!! கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

வீட்டில் செல்வம் பெருகி மகிழ்ச்சி பொங்க..!! இந்த இடத்தில் மட்டும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular