ஐபிஎல் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் நேற்று 7:30 மணியளவில் ஹைதராபாத் அணிக்கும் மும்பை அணிக்கும் மும்பையில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற மும்பை, முதலில் பௌலிங் செய்வதாக முடிவெடுத்தது.
முதலில் பேட்டிங் ஆடிய ஹைதராபாத் அணி 162க்கு 5 விக்கெட்டுகளை விட்டு தனது பேட்டிங்கை முடித்தது. இதில், அபிஷேக் சர்மா 40 ரன்களும் க்ளாஸென் 37 ரங்களும் எடுத்து அசத்தினர். மற்ற வீரர்கள் தனது பங்களிப்பை பெரிதாக வழங்கவில்லை. பௌலிங்கில் மும்பை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் வில் ஜாக்ஸ் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
அடுத்து பேட்டிங் ஆட இறங்கிய மும்பை அணி இதிலும் சிறப்பாக தான் விளையாடியது. வில் ஜாக்ஸ் 36 ரன்கள் எடுத்தார். இறுதியில் மும்பை 18.1 ஓவரில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.




