ஹைதராபாத்தில் விநாயகர் கையில் இருந்த லட்டு திருட்டு நடந்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது..
ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பு தளங்களில் உள்ள பலரும் கலந்து நேற்று செப்டம்பர் 7 விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடினர் மேலும் விநாயகர் கையில் இருந்த லட்டை ஆண்டுதோறும் ஏலம் விட்டு அதற்கான பணத்தை அடுக்குமாடி குடியிருப்பு பராமரிப்பிற்காக பயன்படுத்த வழக்கம், அப்படி இருக்கும் பட்சத்தில் விநாயகர் கையில் இருந்த லட்டு திருட்டுப் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மேலும் சிசிடிவி காட்சிகள் மூலம் விநாயகர் கையில் இருந்த லட்டை திருடியவர் யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் விநாயகர் கையில் இருக்கும் லட்டு மிக சக்தி வாய்ந்ததாகவும் அதன் ஆன்மீகத் தன்மையை உணர்த்தும் விதமாகவும் ஆண்டுதோறும் ஏலம் விடப்படும் அந்த ஏலத்தில் கிடைக்கும் தொகையை வைத்து அடுக்குமாடி குடியிருப்பில் தேவையான செலவுகள் செய்யப்படும் என்றும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி என கூறியுள்ளனர், மேலும் காவல்துறை விசாரித்து வருகிறது..!!




