
விருதுநகர் மாவட்டத்திற்கு பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார்…
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக விருதுநகர் சென்றுள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் அங்கு ரூபாய் 77 கோடியில் ஆறு தளங்களுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தை இன்று திறந்து வைத்து பார்வையிட்டார், இதனை அடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் காட்சி கூடத்தை முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் பார்வையிட்டார், பின்னர் வெம்பக்கோட்டை அகழாய்வு தொல்பொருட்கள் அரங்கம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார், அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார், இதனை தொடர்ந்து விருதுநகரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர். மு க ஸ்டாலின் பெருந்தலைவர் காமராஜரை நமக்கு வழங்கியது விருதுநகர், பெருந்தலைவர் காமராஜரின் மறைவின் போது அவரது மகன் மாதிரி அவருடைய இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை நடத்தியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எனது திருமணத்திற்கு வந்த காமராஜர் வாழ்த்தியதை மறக்க முடியாது, விருதுநகர் என்பதும் அனைவரின் எண்ணத்திலும் வருபவர் சங்கர லிங்கனார் என்று கூறி விருதுநகரை பெருமையாக பேசி புகழாரம் சூடியுள்ளார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்..!!