அம்மா என்பவள் யார்?.. இவள் தான் அம்மா..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

உயிர் கொடுத்து
உருவம் கொடுத்து
ஊணும் கொடுத்து
தன் உடம்பில்
இடமும் கொடுத்து
பூமித்தாய் கேட்டதினால்
தத்தும் கொடுத்து
உனக்கு உணவாக
தாய்பாலும் கொடுத்து
அழுகின்ற பொழுதெல்லாம்
தாலாட்டுப் பாடல் கொடுத்து
சிரிக்கின்ற பொழுது
திருஷ்டிப் பொட்டும் கொடுத்து
படிப்படியாக வளரும் பொழுது
ஆனந்தத்தைக் கொடுத்து
பருவம் அடையும் பொழுது
அரவணைப்பையும் கொடுத்து
மனம் தடுமாறும் பொழுது
ஆதரவும் கொடுத்து
திருமண பந்தத்தில்
உன்னை விட்டும் கொடுத்து
தாம்பத்திய வாழ்க்கையில்
குறுக்கிடாமல் உன் மகிழ்ச்சியை
உனக்கே கொடுத்து
இவ்வளவும் கொடுத்தவள்
தன் வயோதிகத்தில்
உன்னிடம் வந்து எதையும்
கொடு என்று ஒருபோதும்
கேட்டதில்லை.
அவள் தான் “அம்மா”..

Read Previous

நான் காற்றை சுவாசிக்கவில்லை..!! நம்பிக்கையை சுவாசிக்கிறேன்..!! ஏன் தெரியுமா?..

Read Next

காலங்களால் நாம் மறந்தவை..!! அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular