உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், ஆளுநரிடம் தங்கப் பதக்கம் பெற்ற பி.டெக் பட்டதாரி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் தெரிவித்த தகவலின்படி, அரசு வேலைக்காக பலமுறை போட்டித் தேர்வுகளை எழுதியும் வெற்றி பெற முடியாததால், அவர் நீண்டநாளாக மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட குறிப்பில், தனது தந்தையிடம் மன்னிப்பு கேட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம், போட்டித் தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பு அழுத்தத்தால் இளைஞர்கள் எதிர்கொள்ளும் மனநல சவால்கள் குறித்து மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.




