இன்று (செப்.20) அதிகாலை அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அருணாச்சலத்தின் மேற்கு கமெங் பகுதியில் காலை 5.02 மணிக்கு ரிக்டர் அளவில் 2.5 நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து காலை 5.32 மணிக்கு மணிப்பூரில் ரிக்டர் 2.7 நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் இரண்டு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், எந்தவித சேதமும், உயிரிழப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




