இந்திய அணியின் தொடர் தோல்வி எதிரொலி: அடுத்த மாதம் ஆய்வு கூட்டம்; கம்பீரின் ஆதரவு குழுவிலும் மாற்றம்?..

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் இந்திய அணி சந்தித்த தொடர்ச்சியான தோல்விகள் எதிரொலியாக, அடுத்த மாத தொடக்கத்தில் விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டமிட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டி20 தொடரில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் சுப்மன் கில் தலைமையிலான ஒருநாள் தொடரில் இந்திய அணி எதிர்கொண்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.

மேலும், அணியின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், எதிர்கால தொடர்களுக்கான திட்டமிடல் உள்ளிட்ட முக்கிய அம்சங்களும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதோடு, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் ஆதரவு குழுவில் உள்ள சில உறுப்பினர்களின் ஒப்பந்தங்கள், அவர்களின் செயல்பாடு மற்றும் தேவையான மாற்றங்கள் குறித்தும் பிசிசிஐ ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆய்வுக் கூட்டத்தின் முடிவில், இந்திய அணியின் பயிற்சி அமைப்பு மற்றும் நிர்வாகத்தில் சில முக்கிய மாற்றங்கள் குறித்து முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Read Previous

திண்டுக்கல் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தட்டிக்கேட்ட கணவர், உறவினர்கள் மீது கொடூர தாக்குதல்..!!

Read Next

கால்சியம் நிறைந்த ராகி லட்டு: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கியமான சிற்றுண்டி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular