இங்கு பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்டிப்பாக வளர்ப்பதை நாம் பார்த்து வருகிறோம். கண்டிப்பாக வளர்த்தால் நமது குழந்தைகள் சரியான முறையில் வளரும் என்று அனைவரும் மனக்கணக்கு போட்டு வருகிறோம். ஆனால் அது ஒரு போதும் மெய்யல்ல. குழந்தைகளை நீங்கள் கண்டிப்பாக வளர்க்காவிட்டாலும் அந்த குழந்தை சரியாக தான் வளரும். அதே சமயம் ஒரு சில குழந்தைகள் எவ்வளவு கட்டுப்பாடுகள் போட்டு வளர்த்தாலும் சரியாக வளராமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது.
அதே சமயம் ஒரு குழந்தையை கட்டுப்பாடுடன் வளர்த்தால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்று உங்களுக்கு தெரியுமா. இ எல் எஸ் ஏ அமைப்பு ஒரு ஆய்வில் குழந்தைகளை பெற்றோர்கள் கட்டுப்பாடுடன் வளர்த்தால் அந்த குழந்தையின் ஆயுள் குறையும் என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது கட்டுப்பாடுடன் வளரும் ஆண் குழந்தை 80 வயதிற்குள் இறப்பதற்கு 12 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது. பெண் குழந்தைகளை கட்டுப்பாட்டுடன் வளர்த்தால் 80 வயதிற்குள் இறப்பதற்கு 22 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது. எனவே குழந்தைகளை கட்டுப்பாட்டுடன் வளர்ப்பதை தவிர்த்து விடுங்கள். இதுதான் அந்த குழந்தைகளுக்கும் நல்லது.




