உடலை இரும்பாக்கும் எள்ளுப் பொடி சாதம்..!! – ஆரோக்கியமான எள்ளுப் பொடி சாதம் செய்யும் ரகசியம்..!!

Oplus_131072

 

முதலில் எள்ளை நன்றாகத் தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு கப் அரிசியை நன்கு அலசி, சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து உதிரி உதிரியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர், கடாயை அடுப்பில் வைத்து உளுந்தம் பருப்பைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

அதே கடாயில் கடலைப்பருப்பு மற்றும் வரமிளகாயைச் சேர்த்துச் சிவக்கும்படி வறுத்துத் தனியாக ஆற வைக்கவும். தொடர்ந்து, கழுவி வைத்துள்ள எள்ளை மிதமான தீயில் அது நன்றாக வெடிக்கும் வரை வறுத்து ஆற வைக்க வேண்டும்.

கடைசியாகக் கறிவேப்பிலையை வறுத்து, ஆறிய பின் மிக்ஸி ஜாரில் வறுத்த பருப்புகள், எள், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துப் பக்குவமாக அரைத்து எடுத்தால், மணமணக்கும் எள்ளுப் பொடி தயார்!

அடுத்ததாக, வேர்க்கடலையை வறுத்துத் தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, தோல் நீக்கிய வேர்க்கடலை மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்துச் சுவையாகத் தாளிக்க வேண்டும்.

இதில் நாம் அரைத்து வைத்துள்ள எள்ளுப் பொடியைத் தேவையான அளவு சேர்த்து இரண்டு நிமிடம் மிதமான தீயில் கிளறி விட வேண்டும்.

இறுதிப் பக்குவமாக, நாம் ஏற்கனவே வேக வைத்துள்ள உதிரியான சாதத்தை இதனுள் சேர்த்து, பொடி எல்லா இடங்களிலும் ஒட்டும்படி நன்றாகக் கிளறி இறக்கினால், உடம்பை இரும்பு போல மாற்றும் அற்புதம் நிறைந்த எள்ளுப் பொடி சாதம் சுடச்சுடத் தயார்..!

 

Read Previous

கண்களைக் கசக்கியதும் சில நொடிகள் நட்சத்திரங்கள் மின்னுவது போல் உணர்ந்திருக்கிறீர்களா..?? ஏன் தெரியுமா..??

Read Next

மாரடைப்பு வராமல் தடுக்கும் டாக்கடர் பிளான்..!! தினமும் இந்த நேரத்தில் சாப்பிட்டால் இதயம் தப்பிக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular