இப்போது இருக்கும் நவீன காலத்தில் தினமும் மூன்று வேளையும் சமைப்பதை இல்லத்தரசிகள் விரும்புவதில்லை. ஒரு நேரம் சமைத்து அதை மற்ற இரண்டு நேரம் சூடு படுத்தி சாப்பிடும் பழக்கம் தான் இங்கு பல வீடுகளில் உண்டு. இது கூட பரவாயில்லை ஒரு சில வீடுகளில் முதல் நாள் வைத்த குழம்பை இரண்டாவது நாள் சூடு படுத்தி சாப்பிடுவார்கள். ஆனால் ஒரு சில உணவுகளை சூடு படுத்தி சாப்பிடக்கூடாது. அது எந்தெந்த உணவுகள் என்று இந்த பதிவில் காண்போம்.
முட்டையை வைத்தோ அல்லது சிக்கனை வைத்தோ ஏதேனும் உணவு செய்து இருந்தாள் அதை சூடு படுத்தி சாப்பிடக்கூடாது. இது மட்டும் இல்லாமல் கடல் உணவுகளை சமைத்தால் அதையும் மீண்டும் சூடு படுத்தி சாப்பிடவே கூடாது. மேலும் சாதத்தை ஒருபோதும் சூடு படுத்தி சாப்பிடுவதை ஆதரிக்கக் கூடாது.
கேரட் முள்ளங்கி மற்றும் கீரை வகைகளை வைத்து செய்த உணவை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவது நல்லதல்ல. இப்படிப்பட்ட உணவுகளை நீங்கள் சூடு படுத்தி சாப்பிடுவதாக இருந்தால் அதை தவிர்த்து விடுங்கள். நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கியத்தையும் சேர்ப்பது நமது கடமையாகும்.




